Tuesday 2 April 2013

// // Leave a Comment

டின் டின்(ஆரம்பம்)

எனது கல்லுரியில் (அதுதாங்க jaffna hindu college) 7ம்ஆண்டு படிக்கிற காலம்..குமாரசுவாமிமண்டபத்தில் முன்னால் நிலத்தி உட்கார்ந்தபடி அனல் பறக்கும் விவாதங்களிற்குகைதட்டி குதூகலித்திருந்தகாலம்.(எவண்டா அது பாடம் கடத்த காயாளும் உபாயங்களில் ஒன்றாகவே இவற்றிலெல்லாம்  நமக்கு நாட்டம் வந்தது எண்டுஅரசாங்க ரகசியங்களைப் போட்டு உடைப்பது..)



நாம தான் ஆங்கிலக் கதைப்புத்தகங்களின்ர பக்கமே தலை வைச்சுப்படுக்கிறதேயில்லையே..ஆனாலும் நம்ம பசங்க சிலபேர் கலர்கலராய் படங்களோடநம்ம முகமூடி மாயாவி போல புத்தகம் வாசிக்கிறத கண்டபோது ஆர்வமேலீட்டால்வாங்கிப்  படம் பார்த்து..சிறிது சிறிதாய்.. என்ர ஆங்கிலப் புத்தகம் வாசிக்கிறதில்லஎண்டிற சபத்தத்தையே முறியடிக்கச் செய்தது தான் அந்த TinTIn..

சிறிதுகாலம் என்னை என்னை  வெறி கொண்டலையச் செய்தது அந்தக் பல வர்ண TinTin புத்தகங்கள்..மழைக்கும் நூலகப்பக்கம்ஒதுங்காதன் என்னை நூலகஅங்கத்துவம் பெறச்செய்யும் அளவிற்கு நீண்டிருந்தது இந்த TinTIn வெறி.TinTIn சில புத்தகங்களைஎடுத்து வேறுஅலுமாரிகளில் யாரும்எடுத்துவிடாதவாறு ஒழித்துவைக்கத் தீர்மானித்தேன்.இதற்காக நான் தெரிவுசெய்ததுதமிழ் இலக்கியப் புத்தகங்கள் வைக்கும்அலுமாரியைத்தான்.. இப்போது நினைத்தாலும் இந்தச் சிறுபிள்ளைத்தனமானசெயற்பாடுகள் சிரிப்பைத்தான் வரச் செய்கிறது..


டின் டின் பற்றிய எனது முழுமையான  பதிவுக்கு காத்திருங்க .........


0 comments:

Post a Comment