Saturday 29 August 2015

// // 4 comments

விருமாண்டி ஸ்டைல் கதை


யேவன் என்று நினைத்தாய்.....எதை கண்டு சிரத்தாய்....விதை ஒன்று.... முளைக்கையில்....வெளிப்படும் முழுரூபம் ( அட தொலைபேசி அடிக்குதுங்க )

சாப்பிட்டு கொண்டிருந்த இந்திரன்  அலைபேசி திரையில்  யாரென பார்த்தான் .   சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் .


இந்திரன் : சொல்லு மச்சி !

சந்திரன் : ________________

இந்திரன் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : ________________

இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : _________________

இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் :__________________

இந்திரன்: எத்தனை பேரு ?

 சந்திரன்:___________________

இந்திரன்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : __________________

இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !

பாதி உரையாடலை  படித்து  முடித்ததும் பலபேருக்கும்  இந்த கதை கீழே உள்ளவாறு இருந்திருக்கும் என யூகித்திருக்கலாம் ! 

இந்திரன் : சொல்லு மச்சி !

சந்திரன் : ஆனந்து ,ஆள  வச்சு அடிச்சுட்டாண்டா !

இந்திரன் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : இப்போதான்டா

இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : இல்லடா

இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் : எதிர்பார்க்கலை மச்சி !

 இந்திரன்: எத்தனை பேரு ?

 சந்திரன்: நாலஞ்சுபேரு வந்தாங்கடா

இந்திரன்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டல் !

இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ?சரி இரு வரேன் !

ஆனா நான் கதையை மேல உள்ளது மாதிரி நினைச்சு  எழுதலைங்க ! கொஞ்சம்  கீழே படிங்க!

இந்திரன் : சொல்லு மச்சி !

சந்திரன் : வண்டி பஞ்சர் ஆயிடுச்சு!

இந்திரன் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : இப்போதான்டா

இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : லோக்கல் சவாரி அதான் ஜாக்கி  லிவரு எதுவும் எடுக்காம கேர்லெஸ்ஸா இருந்துட்டேன் !

இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் : சரி மச்சி ! சும்மா உதார் உடாம குய்க்கா  கெளம்பி வா  ! கஸ்டமர் கார்லயே வெய்ட் பண்றாங்க !

இந்திரன்: எத்தனை பேரு ?

 சந்திரன்: நாலு பெருசு ! ரெண்டு சிறுசு !

இந்திரன்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டல் பக்கத்துல !


இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !



விருமாண்டி ஸ்டைல்னு  சொன்னவுடனே அருவா கதைன்னு நெனச்சீங்களா ! அதான் இல்ல !அந்த படத்துல ஒரே கதையை ரெண்டு பெரும் வேற வேற மாதிரி சொல்லுவாங்க ! இங்க கதை வேற! வசனம் ஒன்னு !\

இங்கால பக்கம் எல்லாம் அருவா வரப்பிடாது சொல்லிபுட்டன்



Read More