நண்பர்களே....
இன்றைய நாள் நம் அது தாங்க இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல்
எந்தவொரு அமர்கலமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
இப்பொழுது அனைவரது எதிர்பார்ப்பும் தேர்தல்
முடிவுகளுக்காய் காத்திருக்கின்றன. அதனால் என்னுடைய அலட்டலையும்
பதிவேற்ற விரும்புகிறேன்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஸ நிறைவேற்று அதிகார
ஜனாதிபதியாக பதவி ஏற்றார் . அவர்
பதவி ஏற்பதற்கு முன்னும், பின்னும் அவரின் சொத்து மதிப்பு
எவ்வளவு என்று யாரும் அறிந்திருக்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள்
எனக்கும் தெரியாது தான், இந்த
தேர்தலில் அவர் தோல்வி அடைந்தால்
அனைத்தும் தெரிய வரும், அப்பொழுதாவது
அறிந்துகொள்வோம்.
மைத்திரி பாலசிறிசேனவின் 100 நாட்கள் திட்டத்தை பற்றி அறிவீர்களா?
அவர் செய்யப்போகும் முதலாவது
செயலே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை
ஒழிப்பதாகும்.
மாற்றம் ஒன்றே மாறாதது......
பொறுத்திருந்து பார்ப்போம் மாறுகிறதா இல்லை அதே குட்டைக்குள் மட்டை அடிப்பதா என்று......
இதில் நான் எதற்கு சொத்து மதிப்பினை குறிப்பிடுகிறேன் என்று யோசிப்பவர்கள் காத்திருக்கவும் பதில் மற்றொரு பதிவில் தருகின்றேன்