Sunday 16 February 2014

// // 5 comments

காதல் தேர்வு

வணக்கம் நண்பர்களே, காதலர் தினத்திற்கு பதிய பட வேண்டிய பதிவு ஆனா சில பல காரணத்தால இண்டைக்கு பதியிறன்.

காதலர் தினத்தில எனக்கு பெரிசா ஒரு வேலையும் இல்ல ( ஏனென்டா எனக்கு காதலே இல்லையே :( என்ன செய்ய ) ஆனா நீங்க ரொம்ப busyயா  இருந்திரிப்பிங்க :) சோ இந்த பதிவில காதல் பற்றி ஒரு தேர்வு பற்றி பாப்பம் :)

காதலன் ஒருவனுக்கு அவனுடைய காதலி காதல் தேர்வு நடத்தினால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை...  ஐடியா நல்ல இருக்குதா வாங்க பாப்பம் :) 


பாடம் : காதல் இயல் / Lovalogy

பகுதி 1

அ) சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதவும்
ஆ) மதிப்பெண்கள் :5 X1= 5 முத்தங்கள்


1. காதலி : காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

           அ) பிப்ரவரி14  ஆ) ஏப்ரல்14   இ) ஆகஸ்ட்15  ஈ) மே1

            காதலன் : உண்மையான காதலர் தினம் உலகத்துக்கே தெரியும் ஆனால் எனக்கு நான் உன்னிடம் நீ என்னிடமும் காதலை சொல்லிய 10 ஏப்ரல் 2012 தான் எனக்கு காதலர் தினம்.

2.காதலி : காதல் கடவுள் யார்?

        அ) வாலண்டைன் ஆ) முருகன் இ) மன்மதன் ஈ) ஷாஜகான்

            காதலன் : உன் கண்கள்தான் என் காதல் கடவுள்.

3.காதலி: காதல் சின்னம் எது?

       அ) இதயம் ஆ) ரோஜா இ) தாஜ்மஹால் ஈ) கண்கள்

            காதலன் : உன்னுடைய அன்பு தான் என் காதல் சின்னம்.

4.காதலி : அழியா புகழ் பெற்ற சரித்திர காதல் ஜோடி எது?

      அ) ரோமியோ-ஜூலியட் ஆ) கோவலன் - மாதவி இ) பரத்-சந்த்யா ஈ) எம்ஜிஆர்-சரோஜாதேவி

            காதலன் : நீயும் நானும்தான்..

5.காதலி: சிறந்த கவிஞர் யார்?

     அ)ரஜினிகாந்த் ஆ)வைரமுத்து இ)அந்துமணி ஈ)ராகுல் காந்தி

            காதலன் : சந்தேகமே இல்லாமல் உன் அப்பாதான்



பகுதி 2

அ) கோடிட்ட இடத்தை நிரப்புக
ஆ) மதிப்பெண்கள் :5 X2= 10 முத்தங்கள்


1.காதலி :
 உன் பார்வையில் நான் __________ , 


            காதலன் : ''தேவதை''


2.காதலி : எனக்கு நீ வைத்த செல்லப்பெயர் __________ ,

            காதலன் : ''குட்டிம்மா''


3.காதலி : நான் உன்னை அழைக்க விரும்பும் செல்லப்பெயர் __________ ,

            காதலன் : ''டேய் புருஷா''


4.காதலி : நம் காதலுக்கு நீ வைத்த செல்லப்பெயர் __________ ,

            காதலன் : ''சித்ரவதை''


5.காதலி : நம் எதிர்கால வாழ்க்கை  ___________ ,

            காதலன் : ''அது ஒரு அழகிய நிலாக்காலம்''


பகுதி 3

அ) கேட்கப்படும் கேள்விகளுக்கு இரண்டுவரிக்கு மிகாமல் பதிலளிக்கவும்
ஆ) மதிப்பெண்கள் :5 X2= 10 முத்தங்கள்


1.காதலி: காதல் என்றால் என்ன?

            காதலன் : காதல் என்பது என்னைப்பொருத்தவரையிலும் , ''நீ எனக்கு கிடைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதைவிட உன்னோடுதான் என் வாழ்க்கை'' என்பதாகும்.


2.காதலி : உனக்கு என்மேல் எப்பொழுது காதல் வந்தது?

            காதலன் : யாருக்குத்தெரியும்? நீ எப்பொழுது எனக்குள் வந்தாய் , எப்பொழுது என் வெற்று வாழ்க்கைக்கு வர்ணம் தீட்டினாய் , எப்பொழுது நான் வானத்தில் பறக்கத்தொடங்கினேன் , இன்னும் இதுக்கும் முன் நடந்திராத விசயங்கள் பலவும் எப்பொழுது நடந்தது என்று தெரியாது. ஆனால் எனக்குள் காதல் வந்தது தெரியும், நான் ஒரு அதிசயத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியும்.


3.காதலி : என்னைப்பற்றி சிறுகவிதை வரைக..

            காதலன் :  உடம்பில் 

                           எதாவது ஓர் இடத்தில் 

                           அலகு குத்தியிருப்பவர்களை 

                           பார்த்திருக்கிறேன்

                           முதன் முறையாக

                           உடம்பு முழுவதும்

                           'அழகு' குத்தியிருப்பவளை

                          இப்பொழுதுதான் பார்க்கிறேன்...


4.காதலி : நமக்கு திருமணம் ஆனால் நடக்கப்போகும் எதாவது ஒரு நிகழ்வை உன்பார்வையில் எழுது..
            காதலன் : ஒரு நாள் உன்னுடைய அப்பா ஊருக்கு இருவரும் சென்றிருந்தோம் அங்கு ஒருநாள் இருந்துவிட்டு மறு நாள் நான் என்னோட வேலை காரணமா கிளம்ப வேண்டியிருந்தது , உன்னை உன் அப்பா இன்னும் இரு வாரங்கள் இருந்துவிட்டு போகும்படி சொல்லியிருந்ததால் நீ என்னுடன் வரவில்லை . உன் அப்பா வீட்டை விட்டு நான் கிளம்பும்பொழுது வாசலில் நின்று இந்த ரெண்டு வாரம் எப்படிங்க என்னைபிரிஞ்சு இருக்கப்போறீங்க என்றாய் , நீ இல்லாவிட்டால் என்ன உன்னுடைய வாசம் அன்பு எல்லாத்தையும்தான் நம் வீட்டுக்குள்ளும் எனக்குள்ளும் வைத்து பூட்டிவைத்திருக்கிறாயே அது ஆறுதல் கொடுக்கும் என்றேன்.உடனே வீட்டிற்க்குள் சென்று பெட்டி படுக்கையுடன் நீயும் என்னுடன் கிளம்பிவிட்டாய்.

5.காதலி : என்னுடைய செயல்களில் பிடிக்காதது எது ? ஏன்?

            காதலன் : எனக்கு நீ பரிசு பொருள் தருவது பிடிக்காது. ஏனென்றால் என்னுடைய எல்லா ப்ரியத்தையும் நான் உன் மீது மட்டுமே வைத்திருக்க விருப்பம், நீ பரிசு தந்த பொருள்களுக்கும் அதை பிரித்து கொடுக்க விருப்பமில்லை எனக்கு.




பகுதி 4 

அ) கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையை 10 வரிகளுக்கு மிகாமல் எழுது..
ஆ) மதிப்பெண்கள் :2X10= 20 முத்தங்கள்



1.காதலி : ஒரு காதல் கடிதம் வரைக..

            காதலன் :                        ''ப்ரியமானவளே..''

                         நலம் நலமறிய ஆவல் என்று வழக்கம்போல் எல்லா கடிதங்களுக்கும் எழுதும் ஆரம்ப வரிகள் உனக்கு கடிதம் எழுதும் பொழுது தோன்றுவதில்லை நீதான் நலமாய் இருக்கிறாயே என்னிடம் பிறகெப்படி அந்த வரிகள் தோன்றும்?.நாம் தினமும் பார்த்து பேசிக்கொண்டிருந்தாலும் மனதில் இருப்பதை சொல்லாக சொல்லிவிடுவதைவிட எழுத்தால் எழுதுவதும் அதை எழுதும்பொழுதும் வரும் பரவசம் ஓடும் நீரில் தன் முகம் பார்க்கும் பறவையின் பரவசத்திற்க்கு இணையாகவும், எழுதி முடித்ததும் மழை பெய்து கொண்டிருக்கும்பொழுதும் தோன்றும் மஞ்சள் வெயில் போல நம்பிக்கையும், கடிதத்தை எழுதி முடித்து ஒட்டும்பொழுது வெடித்து பறக்கும் பஞ்சாய் மனமும் , அதை உனக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கையில் நீரைவிட்டு தரையில் விழுந்த மீனாய் மனம் துடிப்பது என்று எல்லாமே எனக்கு நரக சுகமாய்த்தானிருக்கிறது அதனாலயே உனக்கு வாரத்திற்க்கு ஒரு கடிதமாவது எழுதிவிடுகிறேன் இந்த வார கோட்டா இந்த கடிதத்துடன் முடிந்தது...நமக்கு திருமணமானாலும் கூட உனக்கு நான் கடிதம் எழுதுவதை நிறுத்தப்போவது இல்லை வர்ட்டா செல்லம்...

                                                                                                      ''ப்ரியமானவன்...''




2.காதலி : என் கண்கள் பற்றிய சமன்பாட்டை எழுதி விளக்குக..

            காதலன் : E=Mc2 என்னடா இது நியூட்டனின் சமன்பாட்டை எழுதியிருக்கிறேன் என்று பார்க்கிறாயா ? விளக்கம் படத்தில் கொடுத்திருக்கிறேன்...


E= Eyes
Mc= McDowell Whisky



என்னடா விஸ்கி பாட்டிலை போட்டிருக்கிறானே என்று பார்க்கிறாயா? உன்னுடைய கண்களை பார்க்கும்பொழுது வரும் போதையைவேறு எப்படி விளக்குவது?



Read More