Tuesday 10 December 2013

// // 6 comments

காதல் டிப்ஸ் - குட்லக் பாய்ஸ்!!!

காதல்ல விழுந்திருக்குற குடிமகனா நீங்கள்... ஆமான்னா இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். காதல்ங்குறது ஒரு அழகான விஷயம், அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட. எப்போ அழகாகும், எப்போது ஆபத்தாகும்ன்னே சொல்ல முடியாது.

காதலனோ காதலியோ எதை, எப்படிப் பேசணும், எதைப் பேசக் கூடாதுன்னு விதிகள் உண்டு. பெரும்பாலும் இந்த விதிகள் கடைபிடிக்க வேண்டியது காதலன் தான். காதலிகளுக்குப் பெரிசா கஷ்டமான விதிகளெல்லாம் இல்லை. காதலன் கடைபிடிக்க வேண்டிய காதல் விதிகள் இங்கே.

1. நீங்க எந்த முக்கியமான வேலைல இருந்தாலும் உங்க காதலியின் அழைப்பை எடுக்காம விட்டுடாதீங்க. கிளசில படிச்சு கொண்டிருந்தாலும் கூட எடுத்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் பையில் போட்டுக்கோங்க. அடுத்து நீங்க லைன்ல இருக்கீங்களா, இல்லையாங்குற கவலையே இல்லாம அவங்க பாட்டு ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருப்பாங்க.

2. காதலி கூட எப்போவாச்சும் சண்டை போட்டா தப்பு அவங்க மேலவே இருந்தாலும் நீங்களே குற்றவாளியாகி ஸாரி சொல்லிடுங்க. “நீ செஞ்சது தப்பும்மா”ன்னு வாய் தவறிக் கூட சொல்லிடாதீங்க. அப்புறம் உங்களுக்கு உப்புமா கூட கிடைக்காது.

3. காதலிக்கு ஏதாச்சும் சோகமா.. பூக்கொத்துகளுடன் போய்ப் பாருங்க. அவங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு கால் உடைஞ்சு போய்ட்டாலோ , அவங்க பரீட்சையில் ஃபெயிலாகிட்டலோ கருப்பு ட்ரெஸ் போட்டுக்கிட்டு கையில் வெள்ளை மலர்க்கொத்துடன் போய் ஃபீலிங் குடுங்க. அந்த நேரத்துல நீங்க காதலிக்காகக் கண்ணீர் விடலைன்னா, அப்புறம் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டியிருக்கும்.

4. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

5. வீட்ல யார் யாரோ சமைச்சதைக் கொண்டு வந்து தானே சமைச்சதா சொல்லி உங்களுக்கு ஊட்டி விடுவாங்க. அப்போவே அந்த நல்ல சாப்பாடை அனுபவிச்சுக்கோங்க.

6. அவங்க சொல்றதுல / செய்றதுல பெரும்பாலான விஷயங்கள் புரியாது. ஆனாலும் புரிஞ்ச மாதிரி மேனேஜ் பண்ணக் கத்துக்கோங்க. உதாரணத்துக்கு நிறங்களைப் பத்தி சொல்லும் போது இலைப் பச்சை, யானைக் கருப்பு, ரத்த சிவப்பு இப்படியெல்லாம் சொல்லுவாங்க. அதுக்காக போய் ஏகப்பட்ட இலை இருக்கு எந்த இலைன்னோ, ரத்தம் வரும் போது இருக்குற சிவப்பா, உறைஞ்சதுக்கப்புறம் இருக்குற சிவப்பான்னெல்லாம் கேக்கக் கூடாது. அதே மாதிரி கடை கடையா ஒரு நாள் முழுக்க அவங்க கூட உங்களை அலைய விட்டுட்டு கடைசில அம்பது பைசாவுக்கு ஒரு ஊக்கு வாங்கிட்டு வருவாங்க. அதுக்காக கடுப்பாகிக் கத்தக் கூடாது. பொறுமை முக்கியம் நண்பர்களே.

7. எல்லா மொழிலேயும் இருக்குற கொஞ்சுற வார்த்தைகளாக் கத்துக்கோங்க. அட, என்ன மொழின்னு தெரியலைன்னா கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சலா இருக்கணும் இப்படி செல்லம், சுச்சூ, புஜ்ஜூ, ப்யாரி, ஸ்வீட்டி, பப்ளி, நுன்னு,....

8. எப்போவும் எங்கேயும் அவங்களை 1 நிமிஷம் கூடக் காக்க வெச்சிடாதீங்க. அன்னிக்கு நாள் முழுக்க அர்ச்சனை 

9.அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

10.அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. 

11.கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

12.“நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

13.ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இத்தனையையும் வெற்றிகரமா சமாளிச்சுட்டீங்க, நீங்க க்ரேட் தான். கண்ணாடி முன்னாடி போய் நின்னு தோளைத் தட்டி சபாஷ் சொல்லிக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க. பீ கேர்ஃபுல் அண்ட் குட் லக் (!) பாய்ஸ்.


(இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேக்கறவங்க பல  காதலிகள் வைத்துத் துன்புற!)
Read More

Tuesday 3 December 2013

// // 1 comment

பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர்...மற்றெல்லாம் புக் படித்து மாழ்வார்

இது நம்ம எல்லாம் பின்னி பெடலெடுத்த exams பத்தினது.. 

exams'na என்ன மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் வேப்பங்காய் தான்.. என்ன மாதிரி ஏன்டா நான் மட்டுமில்ல எங்கட கிளாஸ்சோட LASTBENCH Students ellorukkum than...

யார் யார் எண்டு ஒருக்கா சொல்லிரன்



  1. சிவரதன் (வேற யாருமில்ல நான் தான்..)
  2. ராம்கிஷன்
  3. பிரனவன்
  4. அனுஷன் 
  5. கௌரிஷங்கர்
  6. தயாகரன்  இன்னும் பலர்.....:)


நாங்க எல்லாம் கிளாஸ் ரூம்'ல ரெஸ்ட் எடுக்க கூட first பெஞ்ச் பக்கம் ஒதுங்காத நல்லவங்க. ஏன்னா, ஒரு வேல நம்ம அங்க போயி, நல்லா படிச்சு அந்த பசங்களுக்கு கெட்ட பேர வாங்கி தந்துட கூடாதுல..? அதான்.
அதூம் இல்லாம, அந்த ஒரு termi'ku, ஏகப்பட்ட புக்ஸ்'ல ஆயிரகணக்கான pages'a படிச்சு அவங்க கேக்கற ஐம்பது அறுபது கேள்விகள்ல பத்து இருபாத செலக்ட் பண்ணி.. அதுல ஏழு எட்டு கேள்விகளுக்கு answer எழுதி.., இதெல்லாம் ஒரு பொழப்பா.. சும்மா கடுப்படிச்சுகிட்டு..
என்ன பொறுத்த வரைக்கும் terms, exams' nO WAy. 



எங்க Groupக்கு ஒரு கொள்கை இருக்கு... எங்க கொள்கையின் சாராம்சம் என்னனா, எந்த கிலாஸ்கும் note'nu ஒன்ன கொண்டு போயி மாஸ்டர்'a கேவலப்படுத்திட கூடாது. ஏனா, குருவோட சாபம் பொல்லாதது. final எக்ஸாம் வரைக்கும் கண்டிப்பா புக்'e வாங்க கூடாது. அப்புறம், யாராச்சு books'a வாங்கி xerox போட்டு பத்தரமா எடுத்து வெச்சுக்கணும். (பிட் எழுத வேணும்ல.. அதுக்கு தான்.)


Exam ஆரம்ப்திச்சவொடனே, சில பல நல்ல white sheets'a வாங்கி பிட்டு பிட்டா கட் பண்ணி நோட்ஸ் எடுக்கணும். class'la நோட்ஸ் எடுத்தா மாஸ்டர்'a அவமதிச்சா மாதிரி. எக்ஸாம்'கு நோட்ஸ் எடுக்கட்டா, அது எக்ஸாம்'a அவமதிச்சா மாதிரி. So, நோட்ஸ் எடுத்துக்கணும். கொஞ்சும் descent'a சொன்னா, பிட் எடுத்துக்கணும்.
"பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர் மற்றெல்லாம்

புக் படித்து மாழ்வார் ."

எங்க Group பொன் மொழி.......



எங்களோட  ரொம்ப முக்கியமான கொள்கை அடுத்தவரை சார்ந்து செயல் ஆற்றாமை.

எவ்ளோ பிட் தேவ பட்டாலும் ஒண்டியா ஒக்காந்து அத்தனையும் எழுதிட்டு போனம்னா, எல்லா பிட்டும் நமதே.. வெற்றியும் நாமதே.., மாட்டுனா சிக்கலும் நமதே.. யாருக்கும் பதில் சொல்ல தேவ இல்ல பாருங்க..

எங்கள்  வாழ்வில் நாங்கள்  பின்பற்றிய, பின்பற்றும் வழிமுறைகளை இங்கே பகிருகிறேன். USE பண்ணுங்க...:)



1. முதல் பிட்டு சின்ன சின்ன பேப்பர் எடுத்துகிட்டு எழுதவேண்டிய சப்ஜெக்ட்டோட முதல் பாடத்துல வர முதல் கேள்விக்கான ஹெட் லைன்ஸ் எல்லாம் அந்த குட்டிபேப்பர்ல எழுதி பர்ஸ்ல வச்சிடுங்க (இதுக்கு பஸ் டிக்கட் மாதிரியான பேப்பர்களை யூஸ் பண்ணிக்கிறது நல்லது, ஏன்னா சப்போஸ் இன்விஜிலேட்டர் பாத்துட்டாங்கன்னா அவங்களுக்கே தெரியாம தூக்கிவீசியெறிய வசதியா இருக்கும்.) இதுல எங்கட குருப்பில expert யாரெண்டு பார்த்தா நம்மட இந்துசன் என்பவர் தான். உங்களுக்கு இந்த வழிமுறையில எதாவது சந்தேகம் எண்டா இங்க click பண்ணி அவருட்ட fbல சந்தேகம் கேக்கலாம்...: 


2. ஹால்டிக்கட்ல பின்னாடி மொக்கையான பென்சில்ல எழுதிக்கலாம், கேள்வித்தாள் கொடுத்ததும் அதுல ஹிண்ட்ஸையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு அப்ரம் ஹால்டிக்கட்ல இருக்கரதையெல்லாம் அழிச்சிட்டு படிப்ஸ் மாதிரி எழுதிட்டு இருக்கலாம். கேள்வித்தாள் குடுத்ததும் உடனடியா செய்ர வேலை இது காலம் கடத்தினாலும் மாட்டிக்க வாய்ப்பிருக்கு. கேள்வித்தாள்ல எழுதிட்ட பிறகு வந்து கேட்டா அப்ரம் மறந்துடும் சார் அதான் இப்பவே எழுதிவச்சிக்கிறேன்னு ஒரு ரீலை விடனும்


3. மை பேனா இல்லைன்னா இங்க் பேனா இப்பல்லாம் யாரும் இங்க் பென் யூஸ் பண்ரதில்லை ஆனாலும் இங்க் பேனா பிட்டு அடிக்கிரதுக்கு பெஸ்ட். உள்ளங்கையில முக்கியமான கேள்விகள் வரைக்கும் தேர்ந்தெடுத்து எழுதிவச்சிக்கலாம், இதுல நிரைய எழுதிவைக்க முடியாது இருந்தாலும் ஹெட்டிங்க்ஸ், ஃபார்முலாஸ், படங்களையெல்லாம் வரைஞ்சு எழுதிவச்சிக்கலாம். எழுதிமுடிச்சுட்டு உள்ளங்கையை துடைச்சிட்டாலே போயே போச்சு பிட்டு, வியர்வை அதிகம் வரவங்க பிட்டை சீக்கிரமா நோட் பண்ணிவைக்கிறது நல்லது.


4. எக்ஸாம் ஹால்ல இருக்கர பென்ச், சேர் டேபிள் சுவரையும் நம்ம பிட்டுக்காக பயன்படுத்திக்கலாம், சின்சியரா படிக்கும் (?!) படிக்கிர மாதிரி இருக்கும்போது டேபிள்ல சில நோட்சையெல்லாம் கிட்ட பாத்தமட்டும் தெரியரமாதிரி எழுதிவச்சிக்கலாம், இதுக்கு பென்சில், இங்க் பென் பெஸ்ட் அடுத்த எக்ஸாம்க்கும் எழுதிவைக்கனுமில்ல. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு க்ளாஸ் ரூம்னா

பிரச்சனையில்லை மை பென்லயே எழுதிவச்சிடலாம்.


5. பக்கத்துல நல்ல படிக்கிர பையனா அல்லது  பொண்ணா பாத்து கரெக்ட் பண்ணி உட்காரவச்சிக்கோங்க அந்த பையன் அல்லது  பொண்ணு உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம், இல்லைன்னா எக்ஸாம் சுப்பவைசர்க்கு  தெரியாம அவங்க பேப்பரை வாங்கி எழுதிக்கலாம். இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருந்தா உங்களுக்கு பிடிச்ச கடையில போய் கண்ணாடி வாங்கிபோட்டுக்கிட்டு முன்னாடி பென்ச்ல எழுதரவங்களை பாத்து எழுதிக்கலாம்.


இப்போ இருக்கர வசதிக்கு செல்போன்ல மெசேஜ் பண்ணியும் பிட்டு அடிச்சிக்கலாம் ஆனா பிடிபட்டீங்க செத்திங்க :(



இப்படியெல்லாம் பிட்டு அடிச்சு எழுத பயமா கஷ்டமா இருந்தா அமைதியா ராவோட ராவா படிச்சிட்டு வந்து எழுதலாம், ஆனாலும் அதுல ஒரு கஷ்டம் நிரைய படிச்சி எழுதினா நேரம் போதறதில்லை. அதனால எல்லாக்கேள்விகளுக்கும் சரியான விடைகளை எழுதும்போது முக்கிய குறிப்புகளையெல்லாம் அடிக்கோடிட்டு எழுதுங்க முடிஞ்சா ஸ்கெட்ச் பென்சில் யூஸ் பண்ணி அடிக்கோடிடலாம்,ரீல் விட்டு எழுதியிருந்தா அடிக்கோடிட வேண்டாம். கொஞ்சமா எழுதினாலும் பாக்க நச்சுன்னு இருக்கரமாதிரி கையெழுத்தும் பாயிண்ட்களும் அழகா எழுதுங்க :)






கடைசியாக ஒரு கவிதை --- நான் எழுதல யாரோ எழுதினாங்க...


நான் தான் 
வெற்றியையும் , தோல்வியையும் 
இணைக்கும் பாலாம்! 
என்னை விட்டுவிடாதே ! 

இப்படிக்கு 
எக்ஸாம் பிட்

Read More