Tuesday 15 March 2016

// // 4 comments

ஆங்கிலம் பேசினால் அறிவாளியா?

அட வணக்கம் நண்பர்களே .. இது சும்மா ஒரு சூழலை பார்க்கும் பொது ஏற்பட்ட  ஒரு சிந்தனை .. அத உங்களோட பகிர்ந்து கொள்ள எண்ணினான். இது பற்றிய உங்க கருத்தை கருத்துரையில் சொல்லலாமே.

ஆங்கிலத்தினால் பேசினால் அறிவாளி என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.  ஆங்கிலத்தில் பேசுகின்றவர்களும் அதை பெருமையாகவேக் கருதி பேசுகின்றனர்.  ஆனால், இவை போன்ற எண்ணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை.



மொழித்திறத்திறன் என்பது அறிவைக் காட்டுவதில்லை.   பழக்கத்தினால் வருவது மட்டுமே! எந்தச் சூழலில்  வாழ்கிறோம் என்பதையொட்டியே மொழிப் பேசும் ஆற்றல் வரும்.

ஆங்கிலம் பேசுகின்ற குடும்பத்தில் தங்கி வேலை செய்கின்ற படிப்பே இல்லாத வேலையாட்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்.  அதனால், அவர்கள் மொழியாற்றல் உள்ளவர்கள் என்று அர்த்தமா?

எனவே, தவறான ஆங்கில மோகம் , மதிப்பு மாற வேண்டும்.  தமிழ் மொழிச் சிதைவிற்கும் , தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதற்கும் இத்தவறான எண்ணமே காரணம்.

ஆங்கிலத்தில் பிள்ளைகள் பேசிவிட்டால், அவர்கள் அறிவு அதிகம் பெற்று விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்வது கூட இத்தவறான எண்ணத்தில்தான்.

மொழிப் பேசும் ஆற்றலை எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.  அதற்கான சூழலில் சில காலம் வாழ்ந்தால் போதும்.

ஆனால், அறிவுத் திறன் என்பது எவ்வளவு செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம், எவ்வளவு சுயமாகச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.

ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழி என்பதால் அதனைக் கற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே உண்மை.

அதற்காக தாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தைத் தேர்வு செய்தல் சரியன்று.

சிந்தனை வளமும், சிறந்த அறிவும் தாய்மொழி மூலமே கிட்டும். இது உறுதி செய்யப்பட்ட உண்மை.

Read More

Saturday 12 March 2016

// // Leave a Comment

வந்த வழி

வணக்கம் நண்பர்களே .. இண்டையோட  இந்த  ப்ளாக் தொடக்கி சரியாய் மூண்டு வருஷம்  ஆகிடுதாம். சோ  இது நான் தொடங்கேக்க என்ன  நினச்சுகிட்டு தொடங்கினான். அது இப்ப எந்த அளவுக்கு வந்து இருக்கு.. நான்  நினைச்சதுல எவளவு செய்து இருக்கிறன் எண்டு திரும்பி பாப்பம்  வாங்க ..


இது என் முதலாவது ப்ளாக் இல்லங்க.. இதுக்கு முதல் "இல்லை", "நாங்கள்" எண்டு ரெண்டு  ப்ளாக் செய்தனான். ரெண்டுமே  ஒரு மாசத்துக்குள இழுத்தி மூடிடன். பேந்து  இந்த சிவாவின் அலட்டல் அரம்பிக்கேக்க எனக்கே ஒரு சந்தேகம் இது எவளவு  நாளைக்கு நடக்க போக்குது எண்டு. என்ன அதிசயமோ தெரியல மூண்டு வருசமா  இதுல அப்ப அப்ப அலட்ட நேரம் கிடைக்குது.

நாம தான் எப்பவுமே சின்னதா தொடங்க மாட்டமே.. சோ பலத பற்றி எழுதுறதா தான் தொடங்கினான். பட் அதுல பலத இன்னும் தொடக்கூட இல்லை. நான் எழுதினதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது எண்டா பருங்கோ

ஆண் பெண் நட்பு எண்டு ஒண்டு எழுதினான். அது தான். அத தவிர சில பதிவுக்கு பல பேருட்ட இருந்து பாராட்டு கிடச்சுது.. சிலதுக்கு செமைய திட்டு விழுந்துச்சு.. இப்பிடி இந்த ப்ளாக் ஆல பலவிசயம் நடந்துச்சு

சோ இந்த மூன்றாவது ஆண்டுக்கு ஒரு கொள்கைய எடுக்கலாம் எண்டு இருக்கன். அது என்ன என்னடா அட்லீஸ்ட் ஒரு பதிவி ஆவது போடுற எண்டு. பாப்பம் நாம தான் அடிக்கடி கொள்கைகளை  மாத்திக்கிடு இருக்கிற ஒரு ஜீவன் அச்சே.. இது எவளவு காலத்துக்கு இருக்கு எண்டு பாப்பம்.

டிஸ்கி - இந்த ப்ளாக்கில என்ன தவிர இனொருத்தரும் எழுத்துற. அது யாரெண்டு இன்னும் உங்களுக்கு சொல்லுறதுக்கு இன்னும் காலம் வரேல்ல. சோ அப்பிடி வரேக்க உங்க எல்லாருக்குமே  சொல்லுறன் சரியா ... அடுத்த பதிவுல சந்திப்பம் .. ta taaa ... Byeeee

அட என்ன வீடியோ எண்டு பாக்கிறிங்களா .. இது நான் என் ப்ளாக்குக்கு செய்த trailer சும்மா ஒருக்கா  பாருங்க ... தெறிக்க விட்டிருக்கம்




Read More