Monday 6 May 2013

// // 2 comments

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்..

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்.ஆராயக்கூடாதுன்னு சொல்வாங்க!!
ஆனா,நாம அப்டி எல்லாம் இருக்க முடியுமா?
என்னைக்கி பெரியவங்க சொல்றத கேட்ருக்கோம்??
ஏன்? எதற்கு?? எப்படி???   இப்டியெல்லாம் கேக்கணும்ன்னு
திருவள்ளுவர் சொல்லியிருக்காரு!!!
( அவரு எப்ப சொன்னாருன்னு உடனே என்கிட்டயே ஆரம்பிச்சிட கூடாது )


ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
(அப்ப பொறுமையா இருக்கறவங்க எல்லாம் அறிவாளிங்களா?)

ஆழம் தெரியாம காலை விடாதே.
(ஆழம்ன்னு தெரிஞ்சா அந்தப்பக்கமே போக மாட்டோம்)

யானை வரும் பின்னே!

மணியோசை வரும் முன்னே!!
( யானைக்கு மணியே கட்டலன்னா என்ன வரும்?? )

புலி பசித்தாலும் புல்லை திங்காது.
( நீங்க எப்ப புலி கூடசேந்து சாப்டிங்க? )

கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை.
(கற்பூரவாசனை கழுதைக்கு ஏன் தெரியணும்??
பேப்பர் வாசனை தெரிஞ்சா போதுமே!!)

ஆத்தில கொட்டினாலும் அளந்து கொட்டணும்.
( கொட்றதுன்னு முடிவாயிடுச்சு.அதை எதுக்கு அளக்கனும்? )

சுத்தம் சோறு போடும்.
( பிரைடு ரைஸ் போடுமா? லெமன் ரைஸ் போடுமா? )

சுவர் இருந்தால்தான் சித்திரம்.
( அப்ப வரையறதுக்கு பிரஸ் வேணாமா? )

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
( அப்ப எதுக்கு டாக்டருங்க? )


கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா?
( கோழி எதுக்கு அதோட குஞ்ச மிதிக்கணும்? )

தாயை பழிச்சாலும் தண்ணிய பழிக்க கூடாது.
( அப்ப Aquaguard,Pureit எல்லாம் எதுக்கு விக்கறாங்க?
அப்டியே குடிக்க வேண்டியதுதானே? )


பெண்புத்தி பின் புத்தி.
வீட்ல சொல்லிபாருங்க...தெரியும்!!

பிச்சை எடுத்தானாம் பெருமாளு...
அதை புடுங்கி தின்னானாம் அனுமாரு...
ஏங்க பெருமாளுக்கும் அனுமாருக்கும் சண்டை மூட்டி வுடறீங்க?

கழுத கெட்டா குட்டி சுவரு
நல்ல சுவத்து பக்கம் நிக்காதா?

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்
எலக்ட்ரிக் குக்கர்ல கைய வச்சா கை பதமாயிடும்.

கந்தையானாலும் கசக்கி கட்டு
ஏற்கனவே கந்தல் இன்னும் கசக்குனா கிழிஞ்சிடாது!!

கோழி குருடானாலும் குழம்பு ருசியாயிருக்கும்.
எவனோ தின்னு கெட்டவன் சொல்லியிருப்பான் போல!!

பந்திக்கு முந்து படைக்கு பிந்து.
பந்தியில தொந்திய ரொப்பிட்டு அப்புறம் சண்டைக்கு 
போக சொல்லியிருக்காங்க போல

சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது.
சின்னபிள்ளைங்களுக்கு வேலை வச்சா உள்ள தூக்கி போட்ருவாங்க!!

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் உக்காந்து கொல்லாதா?

கூற மேல ஏறி கோழி புடிக்காதவன்
வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.
ஹைவேஸ்ல வேகமா லாரி வரும்போது குறுக்க போனா 
ஆட்டோமேடிக்கா வைகுண்டம் போயிட்டு போறான்!!

2 comments: