யேவன் என்று நினைத்தாய்.....எதை கண்டு சிரத்தாய்....விதை ஒன்று.... முளைக்கையில்....வெளிப்படும் முழுரூபம் ( அட தொலைபேசி அடிக்குதுங்க )
சாப்பிட்டு கொண்டிருந்த இந்திரன் அலைபேசி திரையில் யாரென பார்த்தான் . சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் .
இந்திரன் : சொல்லு மச்சி !
சந்திரன் : ________________
இந்திரன் : அய்யயோ ! எப்போ ?
சந்திரன் : ________________
இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?
சந்திரன் : _________________
இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள் இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய் மாட்டிகிட்டியேடா !
சந்திரன் :__________________
இந்திரன்: எத்தனை பேரு ?
சந்திரன்:___________________
இந்திரன்: சரி இப்போ எங்க இருக்க நீ ?
சந்திரன் : __________________
இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !
பாதி உரையாடலை படித்து முடித்ததும் பலபேருக்கும் இந்த கதை கீழே உள்ளவாறு இருந்திருக்கும் என யூகித்திருக்கலாம் !
இந்திரன் : சொல்லு மச்சி !
சந்திரன் : ஆனந்து ,ஆள வச்சு அடிச்சுட்டாண்டா !
இந்திரன் : அய்யயோ ! எப்போ ?
சந்திரன் : இப்போதான்டா
இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?
சந்திரன் : இல்லடா
இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள் இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய் மாட்டிகிட்டியேடா !
சந்திரன் : எதிர்பார்க்கலை மச்சி !
இந்திரன்: எத்தனை பேரு ?
சந்திரன்: நாலஞ்சுபேரு வந்தாங்கடா
இந்திரன்: சரி இப்போ எங்க இருக்க நீ ?
சந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டல் !
இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ?சரி இரு வரேன் !
ஆனா நான் கதையை மேல உள்ளது மாதிரி நினைச்சு எழுதலைங்க ! கொஞ்சம் கீழே படிங்க!
இந்திரன் : சொல்லு மச்சி !
சந்திரன் : வண்டி பஞ்சர் ஆயிடுச்சு!
இந்திரன் : அய்யயோ ! எப்போ ?
சந்திரன் : இப்போதான்டா
இந்திரன்: பொருளு எடுத்துட்டு போனியா ?
சந்திரன் : லோக்கல் சவாரி அதான் ஜாக்கி லிவரு எதுவும் எடுக்காம கேர்லெஸ்ஸா இருந்துட்டேன் !
இந்திரன்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள் இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய் மாட்டிகிட்டியேடா !
சந்திரன் : சரி மச்சி ! சும்மா உதார் உடாம குய்க்கா கெளம்பி வா ! கஸ்டமர் கார்லயே வெய்ட் பண்றாங்க !
இந்திரன்: எத்தனை பேரு ?
சந்திரன்: நாலு பெருசு ! ரெண்டு சிறுசு !
இந்திரன்: சரி இப்போ எங்க இருக்க நீ ?
சந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டல் பக்கத்துல !
இந்திரன் : யாழ்ப்பாணம் மெயின் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !
விருமாண்டி ஸ்டைல்னு சொன்னவுடனே அருவா கதைன்னு நெனச்சீங்களா ! அதான் இல்ல !அந்த படத்துல ஒரே கதையை ரெண்டு பெரும் வேற வேற மாதிரி சொல்லுவாங்க ! இங்க கதை வேற! வசனம் ஒன்னு !\
இங்கால பக்கம் எல்லாம் அருவா வரப்பிடாது சொல்லிபுட்டன்
நைஸ் கிறியேட்டிவிட்டி
ReplyDeleteநன்றி
Deleteநன்று.
ReplyDeleteஇன்னும் சிறிது fine tune செய்யலாம்.
வாழ்த்து.
http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/1-3-2-1.html
வருகைக்கும். கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Delete