ராஜ் அண்ணாவின் பை மற்றும் Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி ?? என்ற இரு குறும்படங்கள் இன்று ராஜா தியேட்டரில் வெளியாகி இருந்தது. ராஜ் அண்ணாவின் படம் என்ற படியால் அங்க போய் பார்த்து விட்டு. அது எனது பார்வையில் எப்பிடி இருந்துச்சு .. எண்டும் இங்க அலட்டலாம் எண்டு இருக்கன். சரி வாங்க முதலாவது படமான பை ய எனது பார்வையில் பார்ப்பம்
இச் சமூகத்தை தற்போது ஆட்கொண்டிருக்கின்ற ஒரு கருவினைக் கொண்டு அமைக்கப்பட்ட கதை. இப் படத்திற்காக ராஜ் அண்ணாவிற்கு முதலில் ஒரு salute.
பலருக்கு முன்னோடியாக வாழ்ந்த சமூகம் எம் சமூகம்.அதிலும் ஒரு காலத்தில் எந்தவொரு போதைப்பொருட் பாவனையும் அற்று இருந்த சமுகம். ஆனால் இப்போது எம் சகமூகத்தை சீரளிக்கும் ஒன்றின் பின்னே செல்கின்றௌம். இதை உணர்த்தியிருக்கும் ஒரு படம். இப் படத்தில் நடித்திருக்கும் சுலக்சன் மற்றும் நிருலுக்சன் இருவரும் என் நண்பர்கள் ஒன்றாக சப்தமி அணியில் பணியாற்றியவர்கள். இருவரது முகபாவமும் மிகச் சரியாக இப் படத்திற்கு பொருந்தியிருக்கின்றது. அதே போல் ராஜ் அண்ணா தெரிவு செய்திருக்கும் இடங்கள் மிகவும் கதைக்கு பொருந்தியுள்ளது.எனக்கு இப் படத்தில் ஒரு சிறு திருத்தமாக பட்டது அந்த பொலிஸாரின் காட்சி மட்டுமே. அதில் அவர் அப் பையினை பார்ப்பார். பார்த்து விட்டு ஒன்றும் சொல்ல மாட்டார். அதிலே அப் பொலிஸ்காரர் பையினை திறந்து பார்த்து விட்டு சுலக்சனை நோக்கி “உமக்கு எத்தனை வயது?” என்று கேட்பது போல வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அடுத்து இப் படத்தின் போஸ்டர் இல் இப் படத்தின் பையினுள் என்ன உள்ளது என்று விபரமாக காட்டியூள்ளனர். அடுத்து படத்தின் ஆரம்ப கட்டங்களில் முதல் வாழ்ந்த எமது சமூகம் எவ்வாறு இருந்தது என்றும் கடைசியில் அச் சமூகம் எங்கு செல்கின்றது என்று காட்டுக்கின்றது. தனது சமூகம் சார்ந்த படைப்புக்களில் மீண்டும் ஒரு வெற்றியை பதிய விட்டுள்ளார் ராஜ் அண்ணா.
அடுத்து ,Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி ?? என் பார்வையில்
Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி?? இப் படம் வெளியாகப் போகின்றது என்று சொன்னதும் பல தரப்பட்ட இடங்களில் இருந்து பல்வேறு வகையான எதிர்ப்புகள் வெளிப்படையாக வந்தன .. அதாவது எம் சமூகத்தில் இருந்து இவ்வாறான ஒரு படமா என்று ?? சமூக சிரழிவு .. இப்படி பல எதிர்ப்புக்கள் ... எத்தனையோ எதிர்ப்புக்கள் வந்தாலும் படத்தினை பார்த்து விட்டு கதைக்கவும் என்ற ஒரு பதில் மட்டுமே படக்குழுவினரிடம் இருந்து வந்தது
அவர்கள் கொடுத்த பதில் மிகச்சரியாக உள்ளது. அதாவது இதன் கரு இப்பத்தைய இளம் சமுதாயம் எவ்வாறு உள்ளது என்பதையும் . அவர்கள் எதனை முக்கியமென கருதுகின்றனர். அதற்காக என்ன விலையினை கொடுகின்றனர் என்றும் காட்டுகின்றது.
தியேட்டருக்கு என்று தான் தான் தலைப்பில் சொல்லபட்டு உள்ளது. எந்த தியேட்டர் என்று சொல்லவில்லை என்பதை கவனிக்குக




0 comments:
Post a Comment