Friday 19 August 2016

// // 1 comment

காதலும் இலட்ச்சியமும்.

இப்ப எல்லாம்  எங்க ஐங்கால பக்கம் வாரது.  வரணும் எண்டு ரொம்ப ஆசை தான் பட் நேரம் ஒரு பிரச்சனையா இருக்குது. அதனால அப்ப அப்ப வாராது தான் சரியா இருக்கு.

அட என்ன தலைப்பு வித்தியாசமா இருக்கு எண்டு பாக்கிறிங்களா. இது என் சொந்த கதை இல்லை ஆனால் என் சொந்தங்களின் கதை. அதுதாங்க என் நண்பர்களின்  கதை. 

எனக்கு ஒரு நல்ல நண்பர் இருக்கிறான் (றார் ) அவருக்கு என்ன விட 5 வயது கூட ஆனால் பலவிடயங்களில எங்களுக்குள்ள ஒரு ஒற்றுமை. பாருங்க இண்டைக்கு பல நாளுக்கு அப்புறம் பல மணி நேரம் அவனோட சுத்தினான். பல விஷயங்களை பத்தி கதைச்சம். அப்பிடியே  பத்தியும் கதை போச்சு. 


அப்ப நான் அவன்கிட்ட கேட்டன் ஏன் மச்சி நீ இன்னும் லவ் பண்ணல எண்டு கேட்டன் அப்ப அவன் சொன்னான் இல்ல மச்சி காதல் பண்ணினா  இலட்சியத்துல கவனம் செலுத்த ஏலாது அது தாண்டா  எண்டு சொன்னான். 

அப்ப  நான் அத பெருசா எடுக்கல சோ விட்டுடன். அப்பறம் வீட்ட வந்து இது பத்தி யோசிச்சு பாத்தா அதுல பல கேள்விகள் வருது.அது தான் உங்க கிட்ட கேக்குறன் நீங்க ஒரு பதில் சொல்லுங்க. 

அவன் தான் சொன்னது சரி எண்டுறதுக்கு சொன்ன காரணங்கள். தன்னோட நண்பர்கள் பலர் இந்த காதல் எண்டு போய் ஒரு வேலையையும் செய்யாம எப்ப பாத்தாலும் ஒரு மூலேல போய் போன் கதைச்சுகிட்டு இருப்பாங்க. எங்களுக்கான ஒரு சுகந்திரம் போயுடும். எப்பவும் நாம என்ன பண்ணினாலும் அவங்க கிட்ட சொல்லணும். அதுல காதலுல ஒரு பிரச்சனை எண்டா அத பத்தி பீல் பண்ணியே படிப்பில கவனம் செலுத்த ஏலாது. ( அவன் பல்கலைக்கழக  மாணவன் ) 

இவன் இப்படி சொன்னதுல எந்த பிழையும் இல்ல. ஏனெண்டா இவ்வளவும் நடக்குது தான். அவன் இவளத்தையும் பாத்து இருக்கான். சோ நான் என் நண்பனுல பிழை சொல்ல மாட்டன். 

அவன் ஒரு உதாரணமும் சொன்னான். அவனும் அவன் நண்பனும் பைக் ல வந்து கொண்டு இருந்தவங்களாம் அப்பேக்க அந்த நண்பன்டா காதலி நடந்து போய் கிட்டு இருந்தனவாம். சோ அவன் என்ன செய்தவன் ஏன்டா இவான கொண்டு போய் வீட்டை விட்டுட்டு காதலியை ஏத்த போனவனாம். அதுக்கு ரெண்டு பேருக்கும் இடையில ஒரு வாரம் சண்டை நடந்ததாம்.  இப்பிடி ஏண்டா இருக்கணும் எண்டு என்கிட்ட கேக்குறான்.

நான் சொல்லலாம் சின்ன சின்ன  சண்டைகள் இருந்தா தான் காதலுல சுகம் எண்டு , ஆனால்  அது பொய் எண்டு எனக்கே தெரியும். 

அவனுண்ட point of viewவில காதல் அவனுண்ட இலட்ச்சியத்துக்கு இடைஞ்சலா இருக்கும் எண்டு நினைக்கிறான். 

ஆனால் உண்மை அது இல்லை. 

என் சொந்த அனுபவத்தில் இருந்து 

காதலில் புரிந்துணர்வு மிக முக்கியம். அவ்வாறு புரிந்துணர்வு உள்ள காதல் உங்கள் இலட்ச்சியங்களை அடைய ஒரு ஊண்டு கோலாக இருக்கும்.

உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் சரியான புரிந்துணர்வு இருந்தா  மத்தவங்க மாதிரி நீங்க ஒரு மூலேல இருந்து மணிக்கணக்கா கதைக்கும் எண்டு இல்லை. ஒவ்வொரு நாளும் சந்திக்கணும் எண்டு இல்லை. ஒரு பத்து நிமிஷம் கதைச்சாலும் மனசு விட்டு கதைக்கும். காதல் வசனங்கள் மட்டும் தான் கதைக்கும் எண்டு இல்லை. உங்க அடுத்த கட்ட திட்டங்கள் பத்தி கதைக்கலாம். அவர்கள் எப்போதும் உங்கள் முன்னேற்றத்துக்கு தான் வழி  காட்டுவார்கள். (சொந்த அனுபவம்) . 

என்னை பொறுத்தவரை காதல் இலட்ச்சியத்துக்கு எப்போதும் தடையாக இருக்காது. உங்கள் கருத்து என்ன ?

 

1 comment:

  1. இருவரக்கிடையிலும் சரியான புரிந்துனரவும் விட்டுகொடுக்கும் மனப்பாங்கும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.....

    ReplyDelete