Wednesday 3 February 2016

// // 1 comment

என் பார்வையில்..... :(

மன்னிக்குக ..

என்னடா இவன் முதலிலேயே மன்னிப்பு  கேக்குறானே எண்டு பாக்கிறிங்களா, ஒண்டும் இல்ல இனி நான் சொல்ல போற விடயம் உங்களுள பலருக்கு சிலவேளை சங்கடத்தை கொடுக்கலாம், சில வேளை என்னுல கோவத்த உண்டு பண்ணலாம்.. அதுக்கு தான்.. இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து. அதனால நீங்க எத்து கொள்ளாட்டி நான் அதுக்கு ஒண்டுமே செய்ய ஏலாது.

சரி விடயத்துக்கு வருவமா.. அது என்ன எண்டால் எனக்கு இப்ப 20 வயசாகிட்டு
இது வரைக்கும் எத்தனையோ பேரை பாத்துட்டன், எவளவோ பேரோட பழகி இருக்கன். இப்ப என்ன பிரச்சன எண்டால் இதுல எனக்கு கொஞ்ச பேரை பற்றி நல்லாவே தெரியும் அவங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது பற்றியெல்லாம் இல்லங்க. அவன்களுண்ட குணம், பழக்க வழக்கம் இதுகளை பற்றி.. இப்ப ஒரு ஒரு வருசமா நான் அவங்களை சந்திக்கேல இப்ப இந்த facebookஅஹ பாத்தா அவங்க அவன்களுண்ட பழக்கவழக்கம், செயற்பட்டுகள் எல்லாத்தையும் வேற விதமா காட்டுறாங்கள்.... இதுல எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன எண்டா இவங்க இந்த ஒரு வருசத்துக்குள இப்பிடி மாறிட்டாங்களா என்றது தான். பிறப்புள இருந்து வந்த குணம் இந்த ஒரு வருசத்துக்குள மாறிட்டா ?? என்றது தான்.

சரி எவ்வளவு காலம் தான் இந்த சந்தேகத்தோடையே இருக்கிறது எண்டு ஒருத்தன மட்டும் செலக்ட் பண்ணி பாத்தா அவன் இன்னும் ரியல் லைப்ல அப்பிடியே தான் இருக்கான் .. அவனுண்ட கருத்துக்கள் மாறவே இல்ல. ஆனா இந்த facebookல அப்பிடியே தலைகீழ் அஹ இருக்கு ...

உதரணத்துக்கு நேருல ஒரு விசயத்த தப்பு எண்டுறான் அனால்  facebookல சரி என்கிறான் :(

எதுக்கு இப்பிடி ?? தெரிஞ்சவங்க யாரும் பதில் தாங்க .....

தொப்பி அளவான மட்டும் போடுங்கோ :(  

1 comment: